தேசிய மாணவர் படையானது ‘புனீத் சாகர் அபியான்’ என்ற நாடு தழுவிய முதன்மைப் பிரச்சாரத்தின் சமீபத்தியக் கட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இது கடற்கரைகள், ஆறுகள் மற்றும் ஏரிகள் உள்ளிட்ட பிற நீர்நிலைகளிலிருந்து நெகிழிப் பொருட்கள் மற்றும் பிற கழிவுகளைச் சுத்தம் செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், கடற்கரைகள் மற்றும் ஆற்றின் முகப்புகளைச் சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்து உள்ளூர் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும்.