அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் புற்றுநோயை ஒரு அறிவிக்கத் தக்க நோயாக அறிவிக்குமாறு பாராளுமன்றக் குழுவானது பரிந்துரைத்து உள்ளது.
தற்போது, தேசியப் புற்றுநோய் பதிவுத் திட்டம் (NCRP) ஆனது இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 18% பேரை மட்டுமே உள்ளடக்கியதாக உள்ளது.
புற்றுநோயை அறிவிக்கத்தக்க நோயாக அறிவிப்பது நிகழ்நேர அறிக்கையிடலை மேம்படுத்தும், இலக்கு சார்ந்த நடவடிக்கைகளை ஆதரிக்கும் மற்றும் சான்றுகள் சார்ந்த கொள்கை வகுப்பைச் செயல்படுத்தும்.
புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் நலச் சேவைக்கு நிதியளிப்பதற்காக புகையிலை பொருட்களுக்கு அதிக ஆபத்துள்ளப் பொருட்களுக்கான வீத வரி அல்லது அதிக வரி விதிக்கவும் குழு முன்மொழிந்தது.
வாய் சார்ந்த புற்றுநோய் ஆனது ஆண்டுதோறும் 60,000க்கும் மேற்பட்ட புதியதானப் பாதிப்புகளையும், ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஐந்து உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது.