பருவகாலத்தினால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய புலம்பெயர் தொழிலாளர்களின் ஒரு இடப்பெயர்வினைத் தனிப்பட்ட அடையாள எண்கள் மூலம் வரைபடமிடுவதற்கு வேண்டி இணைய தள அடிப்படையிலான புலம்பெயர்வு கண்காணிப்பு அமைப்புப் பயன்பாட்டை மகாராஷ்டிரா அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
இது நாட்டிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட இது போன்ற முதல் திட்டமாகும்.
இந்தத் திட்டத்தில், புலம்பெயர்ந்தப் பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கல், நோய்த் தடுப்பு, சுகாதாரப் பரிசோதனை போன்ற ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகளின் தொடர் பயன்கள் வழங்கத் திட்டமிடப் பட்டுள்ளது.