2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 126 புலிகள் இறந்துள்ளதாக தேசியப் புலிகள் வளங் காப்பு ஆணையம் கூறுகிறது.
சமீபத்தில், மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா நகரில் புலி ஒன்று இறந்து கிடந்ததை அடுத்து 2021 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் ஏற்பட்ட புலிகள் உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
44 புலிகள் இறப்புகளுடன் மத்தியப் பிரதேசம் முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களும் உள்ளன.