மத்திய அமைச்சரான நிதின் கட்கரி அவர்கள் மகாராஷ்டிராவின் புல்தானா நீர்ப் பாதுகாப்பு மாதிரியானது தேசிய அங்கீகாரத்தை வென்றுள்ளதாக அறிவித்துள்ளார்.
நிதி ஆயோக் ஆனது இதன் அடிப்டையில் நீர்ப் பாதுகாப்பு குறித்த தேசியக் கொள்கையை வடிவமைக்கும் செயலில் இறங்கியுள்ளது.
இது தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பு மற்றும் நீர்ப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் ஒன்றிப் பொருந்துதலை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இது நீர் நிலைகள், மற்றும் நதிகளிலிருந்து வரும் மண்ணைப் பயன்படுத்தி வறட்சிப் பகுதியான விதர்பா பகுதியின் புல்தானா மாவட்டத்தில் முதன்முறையாக எட்டப் பட்டுள்ளது.
இது புல்தானா மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிடையே நீர் சேமிப்பின் திறனை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. அதனால் இது புல்தானா மாதிரி என்று அழைக்கப் படுகின்றது.