TNPSC Thervupettagam

புவியின் ஆழ்கடல் தளம் பற்றிய ஆய்வு

May 27 , 2025 17 days 77 0
  • புவியின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு பரப்பானது கடல் மட்டத்தின் சுமார் 200 மீ அல்லது அதை விட ஆழமானப் பெருங்கடலாக உள்ளது.
  • இதனால் இது உலகின் மிகப்பெரிய மற்றும் குறைவாகவே ஆராயப்பட்ட சூழலியல் அமைப்பாகும்.
  • இன்று வரையில் ஆராய்ச்சியாளர்கள் 120 பிரத்தியேகப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் ஆழ்கடல்களில் செயல்பாடுகளை மேற்கொள்ளும் 14 நாடுகளில் உள்ள சுமார் 34 நிறுவனங்களிலிருந்து 43,681 ஆழ்கடல் காட்சிப் பதிவுகளைச் சேகரித்துள்ளனர்.
  • இதனால், ஆழமான கடலின் அடிப் பகுதியில் மிகவும் அதிகபட்சமாக 0.001% காட்சிப் பதிவுகளை மட்டுமே பதிவு செய்து உள்ளடக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
  • அனைத்து ஆழ்கடல் மூழ்கு ஆய்வுகளிலும் சுமார் 97 சதவீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்கா, ஜப்பான், நியூசிலாந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய ஐந்து நாடுகள் மூலமாக மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.
  • சுமார் 12,080 அடி (3,682 மீட்டர்) என்ற கடலின் சராசரி ஆழமானது, அதனை புலப்படும் காட்சி வழியாக அணுக முடியாததாக ஆக்குகிறது.
  • பெருங்கடலின் 700,000 முதல் சுமார் 1 மில்லியன் இனங்கள் (நுண்ணுயிரிகளைத் தவிர) அதாவது மூன்றில் இரண்டு பங்கு இனங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை அல்லது விளக்கப்படவில்லை.
  • ஆழ்கடல் ஆனது சராசரியாக 4°C வெப்பநிலையுடன் கடுமையான குளிர் நிலையைக் கொண்டுள்ளது.
  • இது புவியின் வளிமண்டலத்தின் அழுத்தத்தை விட சுமார் 40 முதல் 110 மடங்கு வரை அதிக அழுத்தத்திற்கும் உட்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்