புவியின் மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு பரப்பானது கடல் மட்டத்தின் சுமார் 200 மீ அல்லது அதை விட ஆழமானப் பெருங்கடலாக உள்ளது.
இதனால் இது உலகின் மிகப்பெரிய மற்றும் குறைவாகவே ஆராயப்பட்ட சூழலியல் அமைப்பாகும்.
இன்று வரையில் ஆராய்ச்சியாளர்கள் 120 பிரத்தியேகப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் ஆழ்கடல்களில் செயல்பாடுகளை மேற்கொள்ளும் 14 நாடுகளில் உள்ள சுமார் 34 நிறுவனங்களிலிருந்து 43,681 ஆழ்கடல் காட்சிப் பதிவுகளைச் சேகரித்துள்ளனர்.
இதனால், ஆழமான கடலின் அடிப் பகுதியில் மிகவும் அதிகபட்சமாக 0.001% காட்சிப் பதிவுகளை மட்டுமே பதிவு செய்து உள்ளடக்கியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
அனைத்து ஆழ்கடல் மூழ்கு ஆய்வுகளிலும் சுமார் 97 சதவீதத்திற்கும் அதிகமானவை அமெரிக்கா, ஜப்பான், நியூசிலாந்து, பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய ஐந்து நாடுகள் மூலமாக மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.
சுமார் 12,080 அடி (3,682 மீட்டர்) என்ற கடலின் சராசரி ஆழமானது, அதனை புலப்படும் காட்சி வழியாக அணுக முடியாததாக ஆக்குகிறது.
பெருங்கடலின் 700,000 முதல் சுமார் 1 மில்லியன் இனங்கள் (நுண்ணுயிரிகளைத் தவிர) அதாவது மூன்றில் இரண்டு பங்கு இனங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை அல்லது விளக்கப்படவில்லை.
ஆழ்கடல் ஆனது சராசரியாக 4°C வெப்பநிலையுடன் கடுமையான குளிர் நிலையைக் கொண்டுள்ளது.
இது புவியின் வளிமண்டலத்தின் அழுத்தத்தை விட சுமார் 40 முதல் 110 மடங்கு வரை அதிக அழுத்தத்திற்கும் உட்பட்டுள்ளது.