பூஜ்ஜியத்திற்கு நிகரான கார்பன் உமிழ்வுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய, உலகின் முதல் நிலக்கரி அடிப்படையிலான எரிபொருள் மின்கலத்தை சீனா உருவாக்கியுள்ளது.
இதில் நிலக்கரியை எரிப்பதற்குப் பதிலாக, அது பதப்படுத்தப்பட்டு எரிபொருள் மின்கலத்தின் உள்ளே பயன்படுத்தப்படுகிறது.
இரசாயன ஆற்றலை நேரடியாக மின் ஆற்றலாக மாற்றும் ஒரு மின்வேதியியல் வினையின் மூலம் இதில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த முறை எரிதலைத் தவிர்க்கிறது, எனவே இது அதிக செயல்திறனை அளிப்பதோடு மாசுபாட்டையும் குறைக்கிறது.
இங்கு உற்பத்தியாகும் கார்பன் டை ஆக்சைடு பிடிக்கப்பட்டு, தொகுப்பு வாயு அல்லது சோடியம் பைகார்பனேட் போன்ற பயனுள்ள பொருட்களாக மாற்றப் படுகிறது.
இந்தத் தொழில்நுட்பம் நிலக்கரி ஆற்றலைத் தூய்மையாக்க உதவுவதோடு, குறைந்த கார்பன் ஆற்றல் பயன்பாட்டையும் ஆதரிக்கிறது.