TNPSC Thervupettagam

பூர்வாஞ்சல் விரைவுவழிச் சாலை

November 18 , 2021 1342 days 605 0
  • உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  341 கிமீ நீளமான   பூர்வாஞ்சல் விரைவு வழிச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
  • இந்த விரைவுவழிச் சாலை ஆனது அந்த மாநிலத்தின் தலைநகரான லக்னோவை காசிப்பூருடன் இணைக்கிறது.
  • இந்த விரைவுவழிச் சாலையின் முக்கிய அம்சமானது,  இந்திய விமானப் படையின் போர் விமானங்களை அவசர காலங்களில் தரையிறக்குவதற்கும்  புறப்படுவதற்கும் உதவும் வகையில்  3.2 கி.மீ  நீளமுள்ள ஒரு விமான தளத்தினைக் கொண்டதாகும்.
  • பூர்வாஞ்சல் விரைவுவழிச் சாலையானது லக்னோ மாவட்டத்தில் உள்ள சௌத்சராய் எனும் கிராமத்தில்  தொடங்கி 31வது  தேசிய நெடுஞ்சாலையினூடே அமைந்த  ஹைடாரியா என்ற கிராமத்தில் முடிவடைகிறது.
  • இந்த விரைவுவழிச் சாலையானது 6 வழிச்சாலையைக் கொண்டுள்ளதோடு, எதிர் காலத்தில் இது 8  வழிச்சாலையாகவும் விரிவுபடுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்