உத்திரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரில் இந்தியாவின் அதிஅற்புதமான ஹைட்ரோ கார்பன் மாநாட்டின் 13-வது பதிப்பான பெட்ரோடெக் 2019 என்ற மாநாடு இந்திய கண்காட்சி மையத்தில் பிரதமரால் துவக்கி வைக்கப்பட்டது.
இந்த மூன்று நாள் நிகழ்வு 95 நாடுகளைச் சேர்ந்த ஆற்றல் துறை அமைச்சர்களுடன் ஏறக்குறைய 70 நாடுகளைச் சேர்ந்த 7000 பிரதிநிதிகள் கலந்து கொண்ட நாட்டின் மிகப்பெரிய ஹைட்ரோ கார்பன் மாநாடு ஆகும்.
இது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் நடத்தப்படுகின்றது.
2016-ஆம் ஆண்டு டிசம்பரில் பெட்ரோடெக் மாநாட்டின் 12-ஆம் பதிப்பு புதுதில்லியில் நடத்தப்பட்டது.
அமெரிக்கா மற்றும் சீனாவையடுத்து கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை நுகர்கின்ற உலகின் 3-வது மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும்.