இந்திய அரசு சமக்ரா சிக்சா என்ற திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கான தற்காப்புப் பயிற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை நினைவில் கொண்டு பெண்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தற்காப்புப் பயிற்சியானது கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாக்களிலும் அளிக்கப்படுகின்றது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழுள்ள நிர்பயா நிதியின் மூலம் இத்திட்டத்திற்காக மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படும்.
“சமக்ரா சிக்சா” என்பது பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையினால் தொடங்கப்பட்ட பள்ளிக் கல்விக்கான ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமாகும்.