தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் (DAY-NRLM) கிராமப்புற பெண்களுக்கு வேளாண் அல்லாத வாழ்வாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்காக தொழில்முனைவோர் குறித்ததான தேசியப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தப் பிரச்சாரம் ஆனது, மூன்று கோடி லட்சபதி தீதிக்களை (ஆண்டுதோறும் 1 லட்சம் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கும் பெண்கள்) உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூக வள நபர்கள் சாத்தியமான நிறுவனங்களை அடையாளம் காணவும், பெண் தொழில்முனைவோருக்கு வழிகாட்டவும், நீண்ட கால ஆதரவை வழங்கவும் பயிற்சி அளிக்கப்படுவார்கள்.
இந்தத் திட்டம் 50,000 சமூக வள நபர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மற்றும் 50 லட்சம் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்குத் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியினை அளிக்கும்.
இந்த முன்னெடுப்பு உள்ளூர்ப் பொருளாதாரங்களை வலுப்படுத்தும் என்பதோடுநிதி உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும், பெண்கள் தலைமையிலான ஒரு சுய சார்பு கிராமப் புற வேளாண்மை சாராதப் பொருளாதாரத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.