பெண் நீதிபதிகளை மட்டும் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு
March 5 , 2020 2292 days 1110 0
மதராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி முதன்முறையாக பெண் நீதிபதிகளை மட்டும் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வை அமைப்பதன் மூலம் இந்த ஆண்டு கொண்டாடப்பட இருக்கும் சர்வதேச மகளிர் தினத்தைச் சிறப்பு மிக்கதாக மாற்றியுள்ளார்.
இந்த அமர்வானது புஷ்பா சத்தியநாராயணா, அனிதா சுமந்த் மற்றும் பி.டி. ஆஷா ஆகிய 3 பெண் நீதிபதிகளைக் கொண்டிருக்கும்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, மதராஸ் உயர் நீதிமன்றமானது அதிக எண்ணிக்கையில் 11 பெண் நீதிபதிகளைக் கொண்டிருந்தது.