பெண் விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் மகாராஷ்டிரா பெண் விவசாயிகள் அதிகாரமளித்தல் சட்டம், 2026-ஐ இயற்றிய இந்தியாவின் முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உருவெடுத்துள்ளது.
இச்சட்டம் பயிர் சாகுபடி, கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, வேளாண் காடு வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, காளான் வளர்ப்பு மற்றும் முதன்மை பதப்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபடும் பெண்களை, அவர்கள் நில உரிமையாளர்களாகவோ அல்லது தொழிலாளர்களாகவோ இருந்தாலும் அவர்களை அங்கீகரிக்கிறது.
இது பெண் விவசாயி சான்றிதழை (WFC) அறிமுகப்படுத்துகிறது, இதன் மூலம் தகுதியான பெண்கள் நில உரிமை இல்லாமலேயே அரசுத் திட்டங்கள், பயிர்க் காப்பீடு மற்றும் நிறுவனக் கடன்களை அணுக முடியும்.
இச்சட்டம் பெண் விவசாயிகளின் டிஜிட்டல் பதிவேட்டிற்கும், இலக்கு வைக்கப்பட்ட நலத் திட்ட நடவடிக்கைகளுக்காக ஒரு பிரத்தியேக மாநில அதிகாரமளித்தல் நிதியத்திற்கும் வழி வகை செய்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையால் (UN) அனுசரிக்கப்படும் சர்வதேச பெண் விவசாயிகள் ஆண்டின் போது இது அறிமுகப்படுத்தப்பட்டது.
விவசாயத்தில் நிலம், நீர், கடன், விவசாய சேவைகள் மற்றும் முடிவெடுத்தல் ஆகியவற்றுக்கான பெண்களின் அணுகலை மேம்படுத்துவதை இச்சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.