பேச்சுவார்த்தை மற்றும் மேம்பாட்டிற்கான கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கான உலக தினம் - மே 21
May 25 , 2022 1441 days 446 0
இந்தத் தினமானது, உலகக் கலாச்சாரங்களின் செழுமையைக் கொண்டாடுவதையும், அமைதி மற்றும் நிலையான மேம்பாட்டினை அடைவதற்கான உள்ளடக்கம் மற்றும் நேர்மறையான மாற்றத்தின் முகமையாக விளங்குகின்ற அதன் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2001 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் உள்ள பாமியான் புத்தர் சிலைகளை அழிக்கப்பட்டதன் விளைவாக யுனெஸ்கோ அமைப்பானது 2001 ஆம் ஆண்டில் கலாச்சார பன்முகத்தன்மை குறித்த உலகளாவியப் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது.
பின்னர் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, மே 21 ஆம் தேதியானது பேச்சுவார்த்தை மற்றும் மேம்பாட்டிற்கான கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கான உலக தினமாக அறிவித்தது.