TNPSC Thervupettagam

பொக்ரான் II சோதனையின் 25 வது ஆண்டு நிறைவு

May 16 , 2023 816 days 478 0
  • 1998 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதியன்று, இந்திய இராணுவத்தின் பொக்ரான் சோதனைத் தளத்தில் இந்தியா மூன்று அணுகுண்டு சோதனை வெடிப்புகளை நடத்தியது.
  • இரண்டு நாட்களுக்குப் பிறகு, மே 13 ஆம் தேதியன்று, மேலும் இரண்டு குண்டுகள் சோதனை செய்யப்பட்டன.
  • ஆபரேஷன் ஷக்தி என்ற குறியீட்டுப் பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனைகள் ஆனது அணுக்கருப் பிளவு மற்றும் வெப்ப அணுசக்தி ஆயுதங்களை உருவாக்கும் இந்தியாவின் திறனை வெளிப்படுத்தியது.
  • 1974 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதியன்று, இந்திரா காந்தி அவர்களின் ஆதரவுடன், இந்தியா தனது முதலாவது அணுகுண்டு சோதனையை பொக்ரான் சோதனை தளத்தில் நடத்தியது.
  • பொக்ரான்-I சோதனைக்கு ஆபரேஷன் ஸ்மைலிங் புத்தர் (சிரிக்கும் புத்தர் நடவடிக்கை) என்ற குறியீட்டுப் பெயர் வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்