TNPSC Thervupettagam

பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) திருத்த மசோதா, 2019

September 18 , 2019 2128 days 631 0
  • கடந்த நிதிநிலைக் கூட்டத் தொடரின் போது (பட்ஜெட்) பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) திருத்த மசோதா, 2019 ஆனது நடைமுறைக்கு வந்துள்ளது.
  • இந்த மசோதாவானது பொது வளாகங்கள் (அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம், 1971 இல் திருத்தம் செய்கின்றது.
  • இது அரசாங்கக்  குடியிருப்புகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்களை சீராகவும் விரைவாகவும் வெளியேற்ற உதவ இருக்கின்றது.
  • இது தகுதியான நபர்களுக்கான அரசாங்கக் குடியிருப்பு வசதிகள் கிடைக்கப் பெறுவதை அதிகரிக்கும் என்றும் அவர்கள் அந்த வசதிகளைப் பெறுவதற்கானக் காத்திருப்புக் காலத்தைக்  குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்