TNPSC Thervupettagam

பொதுச் சேவை ஒளிபரப்பு தினம் 2025 - நவம்பர் 12

November 16 , 2025 11 days 30 0
  • அதன் பொதுச் சேவை முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த நாள் ஜன் பிரசாரன் திவாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
  • இந்த அனுசரிப்பு, 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதியன்று அகில இந்திய வானொலியில் M.K. காந்தியின் முதல் மற்றும் ஒரே நேரடி ஒளிபரப்பை நினைவு கூரும் வகையில் அமைந்துள்ளது.
  • புது டெல்லியில் உள்ள ஒலிபரப்பு அலுவகலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒலிபரப்பு மூலம் குருக்ஷேத்ரா முகாமில் தங்கியிருந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகளிடம் காந்தி உரையாற்றினார்.
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது சுதந்திர கருத்து ஒலிபரப்பில் உஷா மேத்தாவின் பங்கையும் இந்த நாள் நினைவு கூருகிறது.
  • உஷா மேத்தா 1942 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதியன்று பம்பாயில் கைது செய்யப் பட்டார் என்பதோடு மேலும் அவர் இயக்கிய நிலத்தடி அல்லது ரகசிய ரேடியோ ஒலி பரப்பியும் அதே நாளில் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்