வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் உத்தரகாண்டில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு 2022 ஆம் ஆண்டு பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு விதி முறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இதற்கான முக்கியக் காரணங்கள் புவியியல் அமைப்புகள், மலைப்பாங்கான நிலப் பரப்பு, தொலைதூர இடம், வரையறுக்கப்பட்ட டிஜிட்டல் (எண்ணிம) இணைப்பு, உள்கட்டமைப்பு ஆகியனவாகும்.
அனைத்து மையப் பல்கலைக்கழகங்களும் 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கைக்குப் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் மதிப்பெண்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.
இது தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள் என இரண்டிற்கும் பொருந்தும்.