முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாள் மற்றும் நல்லாட்சித் தினமாக அனுசரிக்கப்படும் டிசம்பர் 25 ஆம் தேதியன்று போகிபீல் பாலத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
இந்திய ரயில்வேயால் கட்டப்பட்ட இந்த பாலமானது 4.9 கி.மீ. நீளமுடையது ஆகும். இது இந்தியாவின் மிகவும் நீண்ட மற்றும் ஆசியாவின் 2-வது நீளமான சாலை மற்றும் ரயில் பாலமாகும்.
இதுவரை 4.62 கி.மீ. நீளமுடைய கேரளாவில் உள்ள வேம்பநாடு ரயில்பாலம் இந்தியாவின் மிக நீண்ட ரயில் பாலமாக இருந்தது.
இதுவே நாட்டின் முழுமையாக பற்ற வைத்து கட்டப்ப்பட்ட ஒரே பாலமாகும். மேலும் முதன்முறையாக ஐரோப்பாவின் குறியீடுகள் மற்றும் பற்றவைப்புத் தரநிலைகள் ஆகியவை இதற்காக பின்பற்றப்பட்டுள்ளது. இது 120 வருடங்கள் ஆயுளைக் கொண்டது.
இது இரண்டு அடுக்குகளைக் கொண்ட பாலமாகும். இது இரண்டு ரயில் பாதைகளைக் கீழ் தளத்திலும் 3 தட சாலைகளை மேல் தளத்திலும் கொண்டுள்ளது.
அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்திராவின் தெற்கு ஆற்றங்கரையையும் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையோர தீமாஜி மாவட்டத்தின் சிலாபத்தாரையும் இப்பாலம் இணைக்கின்றது.
இந்த பாலத்தின் மேல் மட்ட 3 தடங்களும் விமானப் படையின் மூன்று தரையிறக்க பாதைகளாக செயல்படும்.