இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையானது (ராஜ்யசபா) சமீபத்தில் 2023 ஆம் ஆண்டு போட்டித் திறன் (திருத்தம்) மசோதாவினை நிறைவேற்றியது.
இந்த மசோதாவானது 2002 ஆம் ஆண்டிற்கான போட்டித்திறன் சட்டத்தினைத் திருத்தி அமைக்க உள்ளது.
போட்டித் திறன் மற்றும் நுகர்வோரின் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கச் செய்யும் நடைமுறைகளை தடுப்பதற்கான பல்வேறு அதிகாரங்களை இந்தியப் போட்டித்திறன் ஆணையத்திற்கு (CCI) இது வழங்குகிறது.
இந்தத் திருத்தமானது, குறிப்பாக எண்ணிமச் சந்தைகளில் தற்போது வணிகங்கள் செயல்படும் விதத்தில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கு இணையாக போட்டித் திறன் மேலாண்மையினை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.