மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் நகரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் தேசிய அளவில் அதிகப் பாதுகாப்பு நடவடிக்கை தேவைப்படும் விலங்கு நோய் ஆய்வு நிறுவனமானது (ICAR-NIHSAD) A வகை ரைண்டர்பெஸ்ட் வைரஸ் காப்பு மையமாக நியமிக்கப்பட்டுள்ளது.
விலங்கு சுகாதாரத்திற்கான உலக அமைப்பு (WOAH) மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகியவற்றினால் இது நியமிக்கப்பட்டுள்ளது.
பாரிசில் நடைபெற்ற WOAH அமைப்பின் 92வது பொது அமர்வின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ரைண்டர்பெஸ்ட் ஆனது இதற்கு முன்னதாக 'கால்நடைகளின் மீதான பிளேக்' என்று அழைக்கப் பட்டது.
2011 ஆம் ஆண்டில் உலகளவில் அழிக்கப் படுவதற்கு முன்பு இது ஓர் அழிவுகரமான கால்நடை நோயாக இருந்தது.