போரினால் ஆதரவற்றோர் ஆனவர்களுக்கான உலக தினம் – ஜனவரி 06
January 6 , 2021 1868 days 717 0
இது உலக அளவில் வளர்ந்து வரும் மனித நேய மற்றும் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ள போரினால் ஆதரவற்றோர் ஆனவர்களின் பிரச்சினைகளைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
போரினால் ஆதரவற்றோர் ஆனவர்களின் உலக தினமானது ‘SOS Enfants en Detresses’ என்ற ஒரு பிரெஞ்சு அமைப்பினால் தொடங்கப் பட்டது.
இரண்டாம் உலகப் போரானது போலந்தில் 3,00,000 ஆதரவற்றோர் மற்றும் யுகோஸ்லேவியாவில் 2,00,000 ஆதரவற்றோர் என்று ஐரோப்பாவில் மட்டும் மில்லியன் கணக்கில் ஆதரவற்றோர்களை உருவாக்கியுள்ளது.