TNPSC Thervupettagam

போரோபீன் அடிப்படையிலான பசுமை மசகு எண்ணெய் தொழில்நுட்பம்

July 27 , 2026 15 hrs 0 min 34 0
  • குவஹாத்தியில் உள்ள மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் (IASST) ஆராய்ச்சியாளர்கள் ஆமணக்கு எண்ணெயைப் பயன்படுத்தி போரோபீன் அடிப்படையிலான பசுமை மசகு எண்ணெய் சேர்க்கையை உருவாக்கி உள்ளனர்.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (DST) கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான IASST, போரோபீனை அதிக செயல்திறன் கொண்ட மசகு எண்ணெய் சேர்க்கையாக முதல் முறையாகப் பயன்படுத்துவதை நிரூபித்துள்ளது.
  • போரோபீன் என்பது அதிக இயந்திர வலிமை மற்றும் மின் கடத்துத்திறன் கொண்ட போரான் அணுக்களால் முழுமையாக உருவாக்கப்பட்ட இரு பரிமாண (2D) நானோ பொருளாகும்.
  • ஆமணக்கு எண்ணெயில் 0.1 எடை சதவீதம் (wt%) போரோபீனைச் சேர்ப்பதன் மூலம், தூய ஆமணக்கு எண்ணெயுடன் ஒப்பிடுகையில் உராய்வு சுமார் 42% குறைக்கப் படுகிறது.
  • இந்தத் தொழில்நுட்பம் இயந்திரத் திறனை மேம்படுத்துகிறது, ஆற்றல் இழப்பு மற்றும் தேய்மானத்தைக் குறைக்கிறது, மேலும் நிலையான பசுமை மசகு பயன்பாடுகளை ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்