போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழல் சுரண்டுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் 2025 - நவம்பர் 06
November 8 , 2025 309 days 227 0
ஆயுத மோதல்களின் போது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது மற்றும் இராணுவ நன்மைக்காக அதைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது குறித்து உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆனது பெரும்பாலும் மாசுபட்ட நீர், அழிக்கப்பட்ட காடுகள் மற்றும் நச்சு கலந்த மண் ஆகியவற்றால், போரினால் அமைதியான முறையில் பாதிக்கப்பட்ட ஒன்றாக மாறுவதால் இத்தினம் அனுசரிக்கப் படுகிறது.
UNEP அமைப்பின் படி, கடந்த 60 ஆண்டுகளில் சுமார் 40 சதவீத உள்நாட்டு மோதல்கள் இயற்கை வளங்களைச் சுரண்டுவதோடு இணைக்கப்பட்டுள்ளன.