TNPSC Thervupettagam

போலியோ சொட்டு மருந்து 2019

March 14 , 2019 2306 days 700 0
  • இந்திய அரசு 2019 ஆம் ஆண்டின் போலியோ சொட்டு மருந்து முகாமை மார்ச் 9 ஆம் தேதியன்று தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், 5 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகின்றது.
  • ஒவ்வொரு ஆண்டும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது.
  • தேசிய அளவில் 2 போலியோ தடுப்பு இயக்கங்கள், மாநில அளவில் 2 அல்லது 3 போலியோ தடுப்பு இயக்கங்கள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம் போலியோ நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இது நடத்தப்படுகிறது.
  • 2019 ஆம் ஆண்டின் போலியோ சொட்டு மருந்து முகாமின் நோக்கமானது நாட்டில் போலியோ ஒழிப்பை நீடித்திருக்கச் செய்தலாகும்.
போலியோ
  • போலியோ என்று அழைக்கப்படும் போலியோ மெய்லிட்டிஸ் நோயானது மிகவும் அதிக அளவில் தொற்றக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும்.
  • குழந்தைகளில் மற்றவர்களை விட 5 வயதிற்குக் கீழுள்ள நபர்களுக்கு இந்த வைரஸ் நோய்த் தொற்று அபாயம் அதிக அளவில் இருக்கக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
  • மனிதக் கழிவுகள் கலந்துள்ள நீர் மற்றும் உணவுகளின் மூலம் இந்த போலியோ வைரஸ் பரவுகிறது. ஆனால் பாதிக்கப்பட்டோரின் உமிழ்நீரிலிருந்து போலியோ வைரஸ் குறைந்த அளவில் பரவுகின்றது.
  • இந்தியா போலியோ இல்லாத நாடாக 2014 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
  • இந்தியாவில் போலியோ நோயானது கடைசியாக 2011 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி மேற்கு வங்காளம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்