அசாம் மாநிலத்தில் மகம் என்ற நிலக்கரிச் சுரங்கத்தின் நிலக்கரிச் படுகைகளில் 24 மில்லியன் ஆண்டுகள் பழமையான புதைபடிவமான இலைகளை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
அவை நோத்தோபீஜியா என்ற வகை தாவர இனத்தின் உலகின் பழமையான பதிவாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தப் புதைபடிவமான இலைகள் என்பவை பிற்கால ஒலிகோசீன் சகாப்தத்திற்கு (24–23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) முந்தையவையாகும்.
அவை இன்று மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் நவீன நோத்தோபீஜியா இனங்களுடன் (பேச்சேறு மரம்) ஒரு குறிப்பிடத் தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளன.
குறிப்பிடத்தக்க வகையில், தற்போது இந்த நோத்தோபீஜியா இனமானது வட கிழக்கு இந்தியாவில் வளரவதில்லை.
இந்தக் கண்டுபிடிப்புகள் ஆனது, பிற்கால ஒலிகோசீனின் காலத்தின் போது, அசாமில் நோத்தோபீஜியாவின் வளர்ச்சிக்கு ஆதரவாக அமைந்த ஒரு வெப்பமான, ஈரப்பதமான பருவ நிலை காணப்பட்டது என்ற தகவலை வெளிப்படுத்தின.