TNPSC Thervupettagam

மகளிர் விடுதிகளுக்கான புதிய விதிகள்

December 12 , 2025 12 days 128 0
  • தமிழ்நாடு அரசானது 2015 ஆம் ஆண்டு மகளிர் மற்றும் சிறார்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) விதிகளைத் திருத்தியமைத்தது.
  • இது ஒரு பெண்ணுக்கான சராசரி இட (பரப்பு) ஒதுக்கீட்டை 120 சதுர அடியிலிருந்து 50 சதுர அடியாகக் குறைத்தது.
  • இந்த விதிகள் 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகளிர் மற்றும் சிறார்களுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் செயல்படுகின்றன.
  • 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில், அரசு உரிம நடைமுறையை திருத்தியமைத்தது என்பதோடு இதன் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் 10,000 ரூபாய் கட்டணத்துடன் இயங் கலை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • ஆவணங்கள் சரி பார்த்த பிறகு உரிமங்கள் தானாக உருவாக்கப்படும் என்பதோடு மேலும் அது 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
  • இந்த விதிகள் ஆனது அரசு, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள், சமய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களால் நடத்தப் படும் விடுதிகள், இல்லங்கள் மற்றும் தங்குமிட வசதிகளுக்குப் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்