அசாம் மாநிலத்தின் கவுஹாத்தியில் அமைக்கப்பட்டுள்ள மகாபாஹு பிரம்புத்திரா நதி பாரம்பரிய மையத்தினை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார்.
இந்த மையமானது முதலில் காம்ரூப் மாவட்டத்தின் ஆங்கிலேய உதவி ஆணையர் மற்றும் ஆட்சியரின் இல்லமாக இருந்தது.
விடுதலைக்குப் பிறகு, இந்தக் கட்டிடம் 2011 ஆம் ஆண்டு வரையில் துணை ஆணையரின் மாளிகையாக இருந்தது.