நாக்பூர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மகாராஷ்டிர மாநிலத்தின் யவத்மால் மாவட்டத்தில் சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான நாகரிகத்தின் எஞ்சிய பகுதிகள் என்று கருதப்படுகின்ற பகுதிகளைக் கண்டறிந்துள்ளனர்.
இங்கு கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆனது, சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான நாகரிகத்தின் எச்சங்களைக் குறிக்கின்றன.
சுண்ணாம்புக்கல் தரையுடன் கூடிய விளிம்புகளில் மர தூண்கள் கொண்ட வட்ட வடிவ வீடுகளின் கட்டமைப்பு எச்சங்களை இக்குழு கண்டறிந்தது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட பல்வேறு மட்பாண்டங்கள் மற்றும் கலைப்பொருட்களின் எச்சங்களின் அடிப்படையில் இவற்றின் கலாச்சார வரிசையானது இரும்பு காலம் என்பதுடன் தொடங்குகிறது.
அதைத் தொடர்ந்து சாதவாகனர் காலம், இடைக்காலத்தினைச் சேர்ந்த பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன என்பதோடு பின்னர் அது நிஜாம் காலத்தில் ஒரு கண்காணிப்பு நடவடிக்கைக்கான பகுதியாகப் பயன்படுத்தப்பட்டது.