17-வது மக்களவையின் சபாநாயகராக ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஓம் பிர்லா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சபாநாயகராக ஒருவரைத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்தவொரு தகுதி நிலையையும் அரசியலமைப்பு குறிப்பிடவில்லை.
ஒருவர் மக்களவையின் உறுப்பினராக இருந்தாலே சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.
மக்களவையின் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோர் மக்களவை உறுப்பினர்களிடையே, தேர்தல் நடைபெறும் நாளில் மக்களவைக்கு வந்திருக்கும் மற்றும் ஓட்டெடுப்பில் பங்கெடுத்த உறுப்பினர்களின் வாயிலாக சாதாரண பெரும்பான்மையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.