மாநிலங்களவை மற்றும் மக்களவைத் தொலைக்காட்சி என்ற 2 தொலைக்காட்சி அலைவரிசைகளானது “சன்சத் தொலைக்காட்சி” என்ற ஒரே தொலைக்காட்சி அலைவரிசையாக அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவைத் தொலைக்காட்சியானது நாடாளுமன்றத்தின் மேலவையின் செயல்பாடுகளை ஒளிபரப்பப் பயன்படுத்தப் படுகின்றது.
மக்களவைத் தொலைக்காட்சியானது நாடாளுமன்றத்தின் கீழ் அவையின் செயல்பாடுகளை ஒலிபரப்பப் பயன்படுத்தப்படுகிறது.
தற்பொழுது சன்சத் தொலைக்காட்சி என்ற ஒரே குடையின் கீழ் மக்களவைத் தொலைக்காட்சியானது மக்களவையின் செயல்பாடுகளைத் தொடர்ந்து ஒளிபரப்பும் என்றும் மாநிலங்களவைத் தொலைக்காட்சியானது மாநிலங்களவையின் செயல்பாடுகளைத் தொடர்ந்து ஒளிபரப்பும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
1986 ஆம் ஆண்டு பணிப் பிரிவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான ரவி கபூர் அவர்கள் ஒரு ஆண்டுக் காலத்திற்கு இந்த சன்சத் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.