TNPSC Thervupettagam

மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சீட்டுகள்

April 1 , 2019 2318 days 684 0
  • 2019 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஒட்டு மொத்த நாடும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலமாக வாக்களிக்க உள்ள நிலையில் தெலுங்கானாவின் நிஜாமாபாத் பகுதி மக்கள் மட்டும் வாக்குப் பதிவுச்சீட்டு மூலம் வாக்களிக்க உள்ளனர்.
  • 2019 மக்களவைத் தேர்தலில் நிஜாமாபாத் மக்களவை தொகுதியில் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
  • ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களை மட்டுமே இடம் பெறச் செய்ய முடியும். மேலும் ஒரு வாக்குச் சாவடியில் அதிகபட்சமாக 4 இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
  • எனவே தேர்தல் ஆணையமானது பழைய முறையான வாக்குச் சீட்டுமுறைக்கு திரும்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்