2021 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டைப் புதுப்பித்தல் ஆகியவை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுப் புதுப்பித்தலை புது தில்லி மாநகராட்சிப் பகுதியானது தொடங்கி வைக்கும். இந்தப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும் முதல் நபர் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார்.