மணல் மற்றும் தூசிப் புயல்களை எதிர்கொள்வதற்கான சர்வதேச தினம் - ஜூலை 12
July 15 , 2024 373 days 230 0
மணல் மற்றும் தூசிப் புயல்களால் (SDS) அதிகரித்து வரும் உடல்நலம் மற்றும் சுற்றுச் சூழல் சவால்கள் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
SDS ஆனது வரலாற்று ரீதியாக பூமியின் உயிர் வேதியியல் சுழற்சிகளில் முக்கியப் பங்கு வகித்துள்ளது.
ஆனால் மனித நடவடிக்கைகள் தற்போது அவற்றின் அதிகரிப்பிற்குக் குறிப்பிடத்த க்கப் பங்களிப்பினை கொண்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2025-2034 ஆம் காலக் கட்டத்தினை மணல் மற்றும் தூசி புயல்களை எதிர்கொள்வதற்கான ஐக்கிய நாடுகளின் ஒரு தசாப்தமாக அறிவித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2 பில்லியன் டன் மணல் மற்றும் தூசிகள் வளிமண்டலத்தில் நுழைகின்றன.