மணிமாறன் - தமிழ் பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளின் நிகழ்காலப் பாரம்பரியம்
August 2 , 2025 14 days 51 0
பிரதமர் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் வசிக்கும் மணிமாறனின் கலைப் படைப்பினை சமீபத்தில் பாராட்டி உள்ளார்.
தமிழ்ப் பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளைப் படிக்கும் பண்டையக் கலையைப் பாதுகாத்து கற்பிப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்தப் புகழுரை வழங்கப் பட்டது.
அவர் சரஸ்வதி மஹால் நூலகத்தின் தமிழ்ப் பண்டிதராக உள்ளார்.
சரஸ்வதி மஹால் நூலகம் அவர் எழுதிய 20 புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
செந்தலைக் கோயிலின் தனிவரைவு நூல் அல்லது ஒரு பொருள் பற்றிய நூல் (மோனோகிராஃப்) குறித்தும் அவர் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்.
தமிழ்ச் சுவடியலை எவ்வாறு படித்துப் புரிந்து கொள்வது என்பதை மணிமாறன் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்.