TNPSC Thervupettagam

மதிப்பீட்டு அறிக்கை 6

November 30 , 2025 13 days 47 0
  • IPCC AR6 அறிக்கைக்குப் பிந்தைய (மதிப்பீட்டு அறிக்கை 6) புதுப்பிப்பு ஆனது ஒரு சக துறையினால் மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்வாகும்.
  • இது இந்தியாவின் கண்காணிக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்டப் பருவநிலை மாற்றங்கள் குறித்த சமீபத்திய மதிப்பீட்டை வழங்குகிறது.
  • இது இந்தியாவிற்கான குறிப்பிட்ட புதிய கண்காணிப்பு தரவு மற்றும் மேம்பட்ட பருவ நிலை மாதிரிகளைப் பயன்படுத்தி, பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கு இடையேயான குழுவின் (IPCC) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கையை (AR6) அடிப்படையாகக் கொண்டது.
  • 1901–1930 ஆம் காலக் கட்டத்துடன் ஒப்பிடும் போது 2015–2024 ஆம் காலக் கட்டத்தில் இந்தியாவின் சராசரி வெப்பநிலை கிட்டத்தட்ட 0.9°C அதிகரித்துள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • மேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் ஆண்டின் வெப்பமான நாள் ஆனது 1950 ஆம் ஆண்டுகளில் இருந்து 1.5–2°C ஆக வெப்பமடைந்துள்ளது என்பதோடு இது அடிக்கடி நிகழும் மற்றும் கடுமையான வெப்ப அலைகளுக்கு வழி வகுக்கிறது.
  • இந்திய-கங்கை சமவெளிகள் மற்றும் வடகிழக்கில் சரிவுகள் பதிவாகியுள்ளதுடன் தென் மேற்கு பருவமழை ஒழுங்கற்றதாக மாறியுள்ளது.
  • மத்திய இந்தியா மற்றும் கடலோர குஜராத்தில் அதிக மழைப்பொழிவு நிகழ்வுகள் தீவிரமடைந்துள்ளன.
  • வெப்பமண்டல இந்தியப் பெருங்கடல் ஆனது தசாப்தத்திற்கு 0.12°C வீதத்தில் வெப்பம் அடைகிறது.
  • இந்த வெப்பமயமாதல் ஆனது, கடல் வெப்ப அலைகளைச் சமீபத்திய தசாப்தங்களில் ஆண்டிற்கு 20 நாட்களில் இருந்து 2050 ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 200 நாட்களாக அதிகரிக்கச் செய்கிறது என்பதோடு இது பவளப்பாறைகள் மற்றும் மீன்வளத்தை அச்சுறுத்துகிறது.
  • ஆசியாவின் "நீர் கோபுரங்கள்" என்று அழைக்கப்படும் இந்து குஷ் இமயமலை பனிப் பாறைகள் வேகமாக உருகி வருகின்றன.
  • 1.5–2°C என்ற வரம்பிலான புவி வெப்பமடைதலின் கீழ் 2100 ஆம் ஆண்டிற்குள் பனிப் பாறை அளவு 30–50% குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • அரபிக்கடலில் எழும் வெப்பமண்டலப் புயல்கள் வலுவடைந்துள்ளன என்பதோடு இதனால் சமீபத்திய தசாப்தங்களில் அதிகபட்சப் புயல் தீவிரம் 40% அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்