வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவானது ரூ.922 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான பரிந்துரைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
தற்பொழுதுள்ள நாடாளுமன்றமானது 93 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப் பட்டதாகும்.
புதுதில்லியில் உள்ள மத்தியக் கட்டிடமானது நாடாளுமன்ற வளாகம், ராஷ்டிரபதி பவன், இந்தியா நுழைவாயில், வடக்கு & தெற்குப் பகுதி, தேசிய ஆவணக் காப்பகம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இது எட்வின் லூட்டேயன்ஸ் மற்றும் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப் பட்டதாகும்.
இத்திட்டம் பற்றி
இத்திட்டம் மத்தியச் செயலகத்தின் வடக்கு மற்றும் தெற்கு அலுவலகப் பகுதிகள், பாராளுமன்றக் கட்டிடம் மற்றும் 3 கிலோமீட்டர் நீளமுடைய ராஜ பாதை ஆகியவற்றைப் புதுப்பிக்கத் திட்டமிடுகின்றது.
இத்திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் ஒரு புதிய பாராளுமன்றக் கட்டிடமும், 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஒரு பொதுத் தலைமைச் செயலகமும் கட்டி முடிக்கப்படும்.
ஒரு புதிய முக்கோண வடிவிலான பாராளுமன்றக் கட்டிடம் கட்டப்படும்.
தற்போதைய வடக்கு மற்றும் தெற்குப் பகுதி அலுவலகங்கள் அருங்காட்சியகங்களாக மாற்றப் படும்.
பிரதம மந்திரி அலுவலகம், பிரதம மந்திரி மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோரது வீடுகள் மறுநிர்மாணம் செய்யப்படும்.
ஆனால் எந்தப் புதியக் கட்டிடமும் இந்தியா நுழைவாயிலை விட பெரியதாக இருக்காது.