மத்திய தகவல் ஆணையத்தின் (Central Information Commission – CIC) ஆண்டு அறிக்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது.
மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் ஆகியவற்றினால் பெறப்படும் தகவல் அறியும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையானது 1.36 லட்சம் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. இது 2017-18 ஆம் ஆண்டில் இருந்ததை விட 11 சதவீதம் அதிகமாகும்.
மத்தியப் பழங்குடியினர் விவகார அமைச்சகம் (26.54%) மற்றும் உள்துறை அமைச்சகம் (16.41%) ஆகியவற்றால் தகவல் அறியும் விண்ணப்பங்களில் அதிக சதவீத அளவில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
CICயானது 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் சுதிர் பார்கவா என்பவரது தலைமையில் செயல்பட்டு வருகின்றது.