மத்தியப் பிரதேசத்திலுள்ள 3 இடங்களின் பெயரை மாற்றுவதற்கான ஒரு முன் மொழிதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதில் ஹோசங்காபாத் நகரை “நர்மதாபுரம்” என்றும் சிவபுரியை “குண்டேஷ்வர் தாம்” என்றும் பாபாய் என்பதை “மக்கான் நகர்” என்றும் மாற்றுவதற்கு முன் மொழியப் பட்டு உள்ளது.
நர்மதை நதியின் தென்கரையில் அமைந்துள்ள ஹோசங்காபாத் நகரத்திற்கு, 600 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த முதலாவது மால்வா அரசரான ஹோசங் ஷாவின் நினைவாகப் பெயரிடப் பட்டது.
மேலும் மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா (வங்காளம்) எனப் பெயர் மாற்றச் செய்வதற்கான முன்மொழிதலை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
அண்டை நாடான வங்காள தேசத்தின் பெயரை இந்தப் பெயர் ஒத்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.