மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மனிதநேயத்திற்காக இந்தியா என்ற முன்முயற்சியை துவங்கி வைத்துள்ளார்.
இந்த முன்முயற்சியானது பல நாடுகளில் ஒரு வருட காலத்திற்கு செயற்கை மூட்டுகளைப் பொருத்துவதை அம்சமாகக் கொண்டது.
இதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகமானது தொண்டு நிறுவனமான பகவான் மஹாவீர் விக்லாங் சகாயத்தா சமிதி (Bhagwan Mahaveer Viklang Sahayata Samiti -BMVSS) உடன் கூட்டிணைந்துள்ளது.
BMVSS ஆனது உலகளாவிய அளவில் செயற்கை மூட்டுகளைப் பொருத்தும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்.
1975-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் முத்திரை உறுப்புகளில் (Trademark limb) ‘ஜெய்ப்பூர் கால்‘ மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.