TNPSC Thervupettagam

மனித நேயத்திற்காக இந்தியா

October 12 , 2018 2444 days 749 0
  • மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மனிதநேயத்திற்காக இந்தியா என்ற முன்முயற்சியை துவங்கி வைத்துள்ளார்.
  • இந்த முன்முயற்சியானது பல நாடுகளில் ஒரு வருட காலத்திற்கு செயற்கை மூட்டுகளைப் பொருத்துவதை அம்சமாகக் கொண்டது.
  • இதற்காக வெளியுறவுத்துறை அமைச்சகமானது தொண்டு நிறுவனமான பகவான் மஹாவீர் விக்லாங் சகாயத்தா சமிதி (Bhagwan Mahaveer Viklang Sahayata Samiti -BMVSS) உடன் கூட்டிணைந்துள்ளது.
  • BMVSS ஆனது உலகளாவிய அளவில் செயற்கை மூட்டுகளைப் பொருத்தும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்.
  • 1975-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனத்தின் முத்திரை உறுப்புகளில் (Trademark limb) ‘ஜெய்ப்பூர் கால்‘ மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்