TNPSC Thervupettagam

மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணையம்

February 19 , 2019 2358 days 727 0
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை பதவிக் காலம் உள்ள மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணையத்தின் (NCSK - National Commission for Safai Karmacharis) பதவிக் காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணையச் சட்டம், 1993-ல் உள்ள விதிமுறைகளின்படி 1993 ஆம் ஆண்டில் மனிதக் கழிவுகளை அகற்றுவோருக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது.
  • தொடக்கத்தில் 1997 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை உள்ள காலத்திற்கு மட்டுமே இந்த ஆணையம் அமைக்கப்பட்டது.
  • பின்னர் இதன் வரம்பெல்லையானது 2002 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் இதன் வரம்பெல்லை 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 வரை நீட்டிக்கப்பட்டது.
  • NCSK சட்டமானது 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் காலாவதியானது. அதன் பின்னர் அவ்வப்போது சட்டப்பூர்வமற்ற அமைப்பாக NCSK-ன் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டது.
  • தற்பொழுதுள்ள NCSK ஆணையத்தின் பதவிக் காலமானது 2019 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடையவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்