TNPSC Thervupettagam

மன்னார் வளைகுடாவில் பவளப்பாறைகளின் தோற்றம்

August 22 , 2025 16 hrs 0 min 46 0
  • 1960 ஆம் ஆண்டுகளில் இருந்து நிகழ்ந்து வரும் பருவநிலை மாற்றம் மற்றும் பவளப் பாறை அகழ்ந்தெடுப்பு போன்ற மனித நடவடிக்கைகளால் மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
  • சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் (SDMRI) மற்றும் தமிழ்நாடு வனத் துறையைச் சேர்ந்த அறிவியலாளர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வருடாந்திரக் கடலடிப் பவளப்பாறை மீளுருவாக்க ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
  • 20 இனங்களைச் சேர்ந்த மொத்தம் 51,183 பவளப் பாறைத் துண்டுகள் 5,550 செயற்கை அடித்தள மூலக்கூறுகளில் உட்புகுத்தப் பட்டன.
  • இது சுமார் 40,000 சதுர மீட்டர் அளவிலான சிதைந்த பவளப் பாறைப் பகுதியை மீட்டெடுத்தது.
  • நடவு/இடமாற்றம் செய்யப்பட்ட பவளப் பாறைகளின் உயிர்வாழ்வு விகிதங்கள் 55.6% முதல் 79.5% வரை இருந்தன.
  • அக்ரோபோரா இன்டர்மீடியா இனமானது, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதிக உயிர் வாழ்வு (89.1%) மற்றும் வளர்ச்சி விகிதம் (ஆண்டிற்கு 16.7 செ.மீ) ஆகியவற்றினை வழங்கியுள்ளது.
  • 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 10,600 செயற்கைப் பவளப் பாறை தொகுதிகள் (முக்கோணச் செயற்கைப் பவளப் பாறை - TAR மற்றும் துளைகளிடப்பட்ட சரிவக வடிவ செயற்கைப் பவளப் பாறை - PTAR) பயன்படுத்தப்பட்டன.
  • இது PTARகளில் 2004 ஆம் ஆண்டில் 1.23 ஆக இருந்த பவளப்பாறைச்  சேர்ப்பு அடர்த்தியை 2020 ஆம் ஆண்டில் 76.01 ஆக அதிகரித்தது.
  • மீளுருவாக்கப்பட்ட இடங்களில் 2006 ஆம் ஆண்டில் 2.7% ஆக இருந்த உயிர்ப்பு பெற்றப் பவளப்பாறைகள் 2020 ஆம் ஆண்டில் 18.8% ஆக அதிகரித்தது என்ற நிலையில் இது மீட்டெடுக்கப்பட்ட இடங்களில் 1.8% ஆக மட்டுமே இருந்தது.
  • மீளுருவாக்கப்பட்ட இடங்களில் 2006 ஆம் ஆண்டில் 14.5 ஆக இருந்த மீன் எண்ணிக்கையின் அடர்த்தியானது 2020 ஆம் ஆண்டில் 310.0 ஆக வியத்தகு வகையில் உயர்ந்தது.
  • வான் தீவில் 63 மீன் இனங்களுக்கும், கோஸ்வரி தீவில் 51 இனங்களுக்கும் அவை வாழ்விடமளிக்கின்றன.
  • 8,500 செயற்கைப் பவளப் பாறைத் தொகுதிகளை நிறுவச் செய்யவும், தரமிழந்த பவளப் பாறைகள் மற்றும் கடல் புல் படுக்கைகளை மீட்டெடுக்கவும் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பெருங்கடல் வளங்களை நிலையான முறையில் பேணுதல் (TNSHORE) என்ற திட்டத்தைத் தொடங்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்