TNPSC Thervupettagam

மரண தண்டனை ரத்து - லெபனான்

August 15 , 2026 4 days 41 0
  • லெபனான் நாடாளுமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தது, இதன் மூலம் மரண தண்டனையை முறையாக ரத்து செய்த முதல் மத்திய கிழக்கு நாடாக லெபனான் உருவெடுத்துள்ளது.
  • இந்தச் சட்டமானது மிகக் கடுமையான குற்றங்களுக்கு மரண தண்டனைக்குப் பதிலாக ஆயுள் தண்டனை மற்றும் கடுமையான உழைப்பு ஆகியவற்றை மாற்றுகிறது.
  • லெபனான் 2004 ஆம் ஆண்டு முதல் மரண தண்டனையை நிறைவேற்றவில்லை, இருப்பினும் மரண தண்டனைகள் இன்னும் வழங்கப்பட்டு வந்தன.
  • மரண தண்டனையை ரத்து செய்வதற்கான பல ஆண்டு முயற்சிகள் மற்றும் அதை நிறுத்தி வைக்கக் கோரும் ஐக்கிய நாடுகளின் (UN) தீர்மானங்களுக்கான லெபனானின் ஆதரவைத் தொடர்ந்து இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
  • அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் லெபனானில் குறைந்தது 85 பேர் மரண தண்டனைக் கைதிகளாக இருந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்