செப்டம்பர் 12 ஆம் தேதிக்குள் மருத்துவரின் ஆலோசனையின்றி வழங்கப்படும் மருந்துகளின் (OTC - Over the Counter) பகுதியளவுப் பட்டியலை மருத்துவர்கள் மற்றும் மருந்துத் தயாரிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசை தில்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் (DTAB - Drugs Technical Advisory Board) அப்பட்டியலை இறுதி செய்து வெளியிடும் பணியை மேற்கொள்ளும்.
OTC மருந்துகளின் பட்டியலானது பல சுகாதார நிலைமைகளை எளிதாகவும் வெற்றிகரமாகவும் கையாண்டு சிகிச்சைப் பெறுவதற்கு மக்களை அனுமதிக்கின்றது.