மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான சமரசத்திற்குரியக் குற்ற விதிகள் 2025
May 5 , 2025 39 days 55 0
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஆனது, சிறிய குற்றங்களை அபராதம் அல்லது தண்டனைகள் மூலம் தீர்க்க அனுமதிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் (சமரசத்திற்குரியக் குற்றங்கள்) குறித்த விதிகளை அறிவித்துள்ளது.
இந்த முயற்சியானது 1940 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் சிறியக் குற்றங்களின் தீர்வு முறையை நன்கு நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த விதிகள் ஆனது, குற்றவாளிகள் நீண்ட வழக்கு விசாரணை செயல்முறைகளைத் தவிர்த்து அபராதம் மூலம் வழக்குகளைத் தீர்க்க வழிவகை செய்கின்றன.
இருப்பினும், முதல் முறை அத்தகையக் குற்றம் செய்யும் குற்றவாளிகள் மட்டுமே அபராதச் செயல்முறைக்குப் பரிசீலிக்கப்படுவார்கள் என்பதோடு மீண்டும் மீண்டும் குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் அபராதம் செலுத்துவதுடன் அவர்கள் சிறைத் தண்டனையையும் எதிர்கொள்ள வேண்டும்.
மத்திய அரசானது, இதற்கென்று மூத்த நிலை அரசு அதிகாரியின் தரத்தில் ஒரு சமரச அதிகாரியை நியமிக்கும்.
வழக்குத் தொடரலில் இருந்து விலக்குப் பெறுவது இனி தானாகவே வழங்கப்படாது.
அதை வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யும் விருப்புரிமையை சமரச அதிகாரி கொண்டிருப்பார்.