TNPSC Thervupettagam

மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பான சமரசத்திற்குரியக் குற்ற விதிகள் 2025

May 5 , 2025 39 days 55 0
  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஆனது, சிறிய குற்றங்களை அபராதம் அல்லது தண்டனைகள் மூலம் தீர்க்க அனுமதிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் (சமரசத்திற்குரியக் குற்றங்கள்) குறித்த விதிகளை  அறிவித்துள்ளது.
  • இந்த முயற்சியானது 1940 ஆம் ஆண்டு மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் சிறியக் குற்றங்களின் தீர்வு முறையை நன்கு நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த விதிகள் ஆனது, குற்றவாளிகள் நீண்ட வழக்கு விசாரணை செயல்முறைகளைத் தவிர்த்து அபராதம் மூலம் வழக்குகளைத் தீர்க்க வழிவகை செய்கின்றன.
  • இருப்பினும், முதல் முறை அத்தகையக் குற்றம் செய்யும் குற்றவாளிகள் மட்டுமே அபராதச் செயல்முறைக்குப் பரிசீலிக்கப்படுவார்கள் என்பதோடு மீண்டும் மீண்டும் குற்றங்களைச் செய்யும் குற்றவாளிகள் அபராதம் செலுத்துவதுடன் அவர்கள் சிறைத் தண்டனையையும் எதிர்கொள்ள வேண்டும்.
  • மத்திய அரசானது, இதற்கென்று மூத்த நிலை அரசு அதிகாரியின் தரத்தில் ஒரு சமரச அதிகாரியை நியமிக்கும்.
  • வழக்குத் தொடரலில் இருந்து விலக்குப் பெறுவது இனி தானாகவே வழங்கப்படாது.
  • அதை வழங்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்யும் விருப்புரிமையை சமரச அதிகாரி கொண்டிருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்