தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கு மறைமலை அடிகளார் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவரது 150வது பிறந்தநாள் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டது.
மறைமலை அடிகளார் (1876–1950) ஒரு தமிழறிஞர், எழுத்தாளர் மற்றும் தனித்தமிழ் இயக்கத்தை நிறுவியவர் ஆவார்.
இவர் 1876 ஆம் ஆண்டில் வேதாசலம் என்ற பெயரில் பிறந்தார், பின்னர் தூய தமிழ் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 1916 ஆம் ஆண்டில் 'மறைமலை அடிகளார்' என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரியில் 11 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சங்க இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்தம் ஆகியவற்றில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பங்களித்துள்ளார்.
சமஸ்கிருதம் கலந்த வார்த்தைகளின் பயன்பாட்டைக் குறைத்து, தமிழ் அடையாளத்தை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் சொற்களஞ்சியத்தை மேம்படுத்துவதை தனித்தமிழ் இயக்கம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றிருந்த இவர், தமிழின் வளத்தையும் முக்கியத்துவத்தையும் நிரூபிக்க மேற்கண்ட இந்த மொழிகளைப் பயன்படுத்தினார்.
சென்னைக் கன்னிமரா பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள மறைமலை அடிகளார் நூலகமானது அவரது புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களைப் பாதுகாத்து வருகிறது.