2030 ஆம் ஆண்டிற்குள் மலேரியா நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக இந்தியா மேற் கொள்ள உள்ள உத்திகளை இது எடுத்துரைக்கிறது.
2022 ஆம் ஆண்டிற்குள், அனைத்துக் குறைவான (வகை 1) மற்றும் நடுத்தர (வகை 2) தொற்றுள்ள ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து மலேரியாவை முற்றிலும் ஒழிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அனைத்து ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களில் மலேரியாவின் பாதிப்பு வீதத்தை 1000 பேருக்கு 1 பாதிப்பு என்ற அளவிற்கும் கீழ் குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 31 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் மலேரியாவை ஒழிக்க வேண்டும்.
2027 ஆம் ஆண்டிற்குள், அனைத்து ஒன்றியப் பிரதேசங்கள் மற்றும் மாநிலங்களிலும் மலேரியாவின் உள்நாட்டுப் பரவல் (வகை 3) அகற்றப்பட வேண்டும்.