மஹாதாயி நீர் விவகார தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பு
August 16 , 2018 2932 days 1116 0
கடந்த 50 வருடங்களாக மஹாதாயி அல்லது மந்தோவி ஆற்றின் நீர்ப் பகிர்வு குறித்து கோவா, கர்நாடகா, மஹாராஷ்டிராவுக்கு இடையே இருந்து வந்த சச்சரவுகளுக்கு மஹாதாயி நீர் விவகார தீர்ப்பாயம் இறுதித் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பாயம் நதியைச் சார்ந்துள்ள மாநிலங்களுக்கிடையேயான நீர்ப் பகிர்வு குறித்த சச்சரவுகளை தீர்ப்பதற்காக மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் விவகாரச் சட்டம் 1956-ன் கீழ் 2010 நவம்பர் மாதம் அமைக்கப்பட்டது.