மாசுபாடு குறித்த மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் – தில்லி ஐஐடியின் ஆய்வு
December 9 , 2020 1688 days 706 0
இந்திய-கங்கைச் சமவெளியானது நாட்டில் மிகவும் மாசுபட்ட ஒரு பகுதியாகத் தொடர்ந்து நீடிக்கின்றது.
2000 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் மாசுபாட்டு அளவுகளின் அதிகரிப்பு விகிதமானது கங்கைச் சமவெளியை விட அதிகமாக உள்ளது.
இந்த ஆய்வகமானது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐஐடி தில்லி ஆகியவற்றினால் கூட்டாக மேற்கொள்ளப்பட்டது.
செயற்கைக் கோள் தரவை அடிப்படையாகக் கொண்டு இடம் சார்ந்த அளவில் காற்று மாசுபாட்டைக் கண்டறிந்த இதே வகையைச் சேர்ந்த முதலாவது ஆய்வு இதுவாகும்.