2010-11 ஆம் ஆண்டில் தொடக்கப் பள்ளிகளில், மாணவர் ஆசிரியர் விகிதம் 43 ஆக இருந்தது.
2020-21 ஆம் ஆண்டில் இது 26.3 ஆகக் குறைந்துள்ளது.
2010-11 ஆம் ஆண்டில் மேல்நிலைப் பள்ளிகளில் 33 ஆக இருந்த மாணவர்-ஆசிரியர் விகிதம் ஆனது 2020-21 ஆம் ஆண்டில் 18.9 ஆகக் குறைந்துள்ளது.
இந்தியாவில் 1.1 இலட்சம் பள்ளிகள் ஒற்றை ஆசிரியர் நிறுவனங்களாகும்.
நாட்டில் இன்னும் 11.16 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வியின் பல்வேறு நிலைகளில் உள்ள மாணவர் ஆசிரியர் விகிதம் வெவ்வேறு வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளக் குழந்தைகளுக்கு வேண்டி கற்பிக்கப் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் பணியிடம் இருப்பதை இது காட்டுகிறது.
பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது அதிக கவனம் செலுத்தப் பட்ட முறையிலான கல்வியை வழங்குவதற்குப் பங்களிக்கிறது.